செவ்வாய், 21 ஏப்ரல், 2020

குழந்தை.

முதல் முத்தம்
முதல் எழுத்து
முதல் அடி
முதல் வெற்றி.

இளைஞன்.

முதல் காதல்
முதல் கவிதை
முதல் வேலை
முதல் சம்பளம்.

சம்சாரி.

முதல் குழந்தை
முதல் கோபம்
முதல் மன்னிப்பு
முதல் நரை.

முதியவர்.

முதல் இழப்பு
முதல் ஏமாற்றம்
முதல் பலவீனம்
முதல் வலி.

மீண்டும் குழந்தையாகி -
மற்றோர் அரவணைப்பில்
இறைவனை அடைய
நீண்ட பயணம்...

4 கருத்துகள்:

  1. உலக உண்மை, உரைத்த விதம் அருமை.
    Palani advocate

    பதிலளிநீக்கு
  2. ஓஹோ! S.ஆனந்தி என்பது கம்பன் வீட்டு கைத்தறியா? பதினாறு அடி பாயுதே!
    To Anandhi from my friend Marimuthukumar of oyr group also here.
    கம்பன் மகாசமுத்திரம். அவன் ஒருதுளியின் பலகோடி சிதறல்களில் ஒன்றுக்கு நான் இணையாவேனா? இப்போதுதான் அவள் வருகிறாள்.உங்ள் வாழ்த்துக்கள் அவளுக்கு ஊக்கமளிக்கும்.

    பதிலளிநீக்கு