ஞாயிறு, 17 நவம்பர், 2019

இறை(யின்மை)

சுமைகளுக்கப்பால்
வலிகளுக்கப்பால்
வெற்றி தோல்விகளை தந்த காலனுக்கப்பால்
தெரிந்தவை இருக்க
தெரியாதவையின் தேடலில் கிடைத்த விடையில்
அறிந்தும் அறியாததுமாகி
பிணி அகற்றி பேருதவி செய்த
மானுடனின் மகத்துவத்தை அறியாமல் இருந்ததோ
இறையின்மை.
இறை தேடலும் அவ்வழியே!!


வெள்ளி, 15 நவம்பர், 2019

மரம்

தன்னிகரற்ற மனம்
ஒரு மரம்
மறைத்தது மரும வேர்கள்
மறந்தது கவலைகளை
மனதின் சிந்தையில்
வளர்ந்தது ஓர் உலகம்
விதை விதைத்தவனே
அன்று போல் தினையருத்தான்
சீண்டிய மழைத்துளிகள்
மானுடனாய் உள்மனம்
அடைகாத்த பேருதவி‌ அந்த மரத்திற்கு
இன்று மன வலையினை தாண்டிய அச்சுறத்தல்
மரத்தினைக் களைய பெறும் முயற்சி
மனிதனே வளர்த்த மனத் தீவிரவாதம்!