சனி, 28 மார்ச், 2020

கரோனா தந்த அமைதி தேசம்...

மனித மனதின் அமைதி
புத்த சிலையின் அமைதி
தாஜ் மஹாலின் அமைதி
குழந்தைத் தூங்கும் அமைதி
கோயில் தெய்வங்களின் அமைதி.
தினமும் என் மௌனத்தின் அமைதி
அமைதியைத் தேடி எங்கோ செல்லாமல்
இன்று அமைதியை நம் மௌனத்தில் தேடுவோம்
நம் முன்னே நிற்கும் எல்லாப் பொருள்களிலும்
உள்ள ஓர் அற்புதத்தை தேடுவோம்
அதுவே அமைதியின் குழந்தையான மௌனம்
இன்னாட்களை அமைதியில் கழிப்போம்.
விழித்துக் கொள்வோம்
வாழ சச்சரவு அவசியம் இல்லை
எல்லாம் தந்த இயற்கையில் எல்லாம் அமைதியென
சுழலும் உலகமெல்லாம் அமைதியில் தழைக்க
சிறிது காலம் விடுமுறை
நேசியுங்கள் அமைதியை...