வெள்ளி, 10 ஏப்ரல், 2020

கல்லரை ரோஜா!!!

கல்லரை ரோஜா!!

செவ்வானம் பூத்திருக்க, கீழ் வானம் சிவந்திருக்க
புல்லினங்கள் இல்லங்களை சாடும் நேரத்திலே
பூவினங்கள் குவிந்து உறங்கும் வேளையிலே
மனிதன் கணவினுள் இறங்கும் நேரத்தில்
ஏனோ என் மனம் வெம்பியது.
கணவினுள் வாழும் மனிதனின் வாழ்க்கையே
கணவுகளே காணாத விலங்குகளின் நோக்கம்.
தொலைதூர வெளிச்சங்களை நோக்கிய மனிதன்
வெளிச்சமே இல்லாத ஒரு கல்லறையின் நினைவில்
ஆடி தீர்ந்துவிட்ட வாழ்க்கையில் அவன் நினைவிடம் - ஒரு கல்லரை
இருள் சூழ்ந்திருந்த அவன் இறப்பில் ஒரு வெளிச்சம்
அதுவே அக்கல்லரை ரோஜா.
முடிந்துவிட்ட வாழ்க்கையின் வெளிச்சங்களைக் கூறுகிறது.
இறப்பு என்பது உறக்கம்
பிறப்பு என்பது விழிப்பு
இரண்டையும் கூறுபவள் இந்த ரோஜா
அன்று மலர்ந்த முகம் , இன்று புன்சிரிப்பு
உன் மலர்ச்சிக்கு காரணம் என்ன என்று வினவினேன்?
வாழ்ந்து சிறக்கும் மனிதனுக்கு - இறப்பு என்பது அவன் பெறும் வெகுமதி
ஆகையால் நான் இறப்பு என்றால் நிறம் மாறுவேன்
மனிதன் இறப்பில் எனக்கு கொண்டாட்டம் இல்லை,
அவன் வாழ்வில் பெற்ற அனுபவங்களை நான் கூறுவேன்,
ஆகையால் நான் மகிழ்ந்து காணப்படுவேன், என்றது ரோஜா.
கல்லறையில் நான் கண்ட மலர்
அவன் பிறப்பில் கொடுக்கப்பட்ட அதே ரோஜா
ஆனால் இன்று
கல்லறையில்....
     எஸ் ஆனந்தி
      2002

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக