சனி, 1 நவம்பர், 2025

சிறிய நாற்காலி

 கிட்டத்தட்ட நூற்றாண்டு வாழ்ந்துவிட்டது

கொள்ளுத்தாத்தா கொள்ளுப்பாட்டி என

அனைவரும் வந்தமர்ந்த நாற்காலி

பின்பு அம்மா அப்பா வண்ணமடித்து

பாப்பா அமர்ந்து அழகிட்டது.

மனிதன் தான் பிறந்து வளர்ந்து,

தளர்ந்த பின்பு இறைவனடி சேர்கிறான்

ஆனால் இந்நாற்காலி அவன் பரம்பரை

அனைத்துக்கும் வசதி கொடுத்திற்று.

வயதை அறியும் மனிதன்தான்

இந்நாற்காலியின் சிறந்த காவலாளி.

என்றும் தழைக்க மானுடம் என

இறைவனை வேண்டுபவன் மனிதனே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக